மதுரை: அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால், அதற்கு ஈடாக திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் 20 நாட்கள் வருமானத்தில் ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி உள்ளிட்ட 30 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எங்களுக்குச் சொந்தமான நிலத்தை 2017-ல் அரசு கையகப்படுத்தியது. இதற்கு ரூ.4.37 கோடியை இழப்பீடாக வழங்க மாவட்ட நீதிமன்றம் 2021-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்த அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடியாகியும், இன்னும் இழப்பீடு வழங்கவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


