திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், “உயர் நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலின் வழக்கங்களை வெளிப்படையாக மீறிவிட்டார். இந்த மரபு மீறலுக்கு சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த மீறலுக்கு பரிகாரம் செய்யும் விதமாக காங்கிரஸ் அல்லது பாஜகவினர் ஏன் இன்னும் நாம ஜபம் செய்யவில்லை? முதல்வர் பினராயி விஜயன் அல்லது கேரள அமைச்சர்கள் யாராவது இப்படி நடந்து கொண்டிருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்?” எனப் பதிவிட்டுள்ளார்.
Click the link above to read the full article on the original website.


