சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்துவது என பாமகவின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்புமணிக்கு எதிராக, தனது மகள் காந்தியை கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இளைஞர் சங்க தலைவராக கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நியமித்தார்.
Click the link above to read the full article on the original website.


