ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. தனது சொந்த ஊரில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டினார். பக்தர்களிடம் ரூ.20 கோடி வரை நன்கொடை பெற்றார். 4 ஆண்டுகள் முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
Click the link above to read the full article on the original website.


