சென்னை: மழை, மெட்ரோ பணி மற்றும் சாலைப் பள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியது. பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் செல்ல முடியாமல் குறைந்த வேகத்தில் சென்றனர். எனவே பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மெட்ரோ மற்றும் மேம்பாலப் பணிகளால் சாலைகள் சுருங்கிவிட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
Click the link above to read the full article on the original website.


