காட்பாடி: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாலாற்றில் செல்லும் தண்ணீர் ஏரி, குளம், குட்டைகளுக்குத் திருப்பி விடப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. காட்பாடி கழிஞ்சூர் ஏரியும் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Click the link above to read the full article on the original website.


