பெகுசராய் (பிஹார்): பாஜக தலைவர்கள் கடந்த காலம் குறித்தும் எதிர்காலம் குறித்துமே பேசுகிறார்களே தவிர நிகழ்காலம் பற்றி பேசுவதில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெகுசராய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “பிஹாரில் இருந்துதான் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கினார். பிஹார் நிலம் நாட்டுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த நிலம் நாட்டுக்கு சுதந்திரம், முன்னேற்றம், சிறந்த தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைக் கொடுத்தது. ஆனால், இன்றைய பிஹாரைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய நிலம் ஏன் வளர்ச்சியடையவில்லை என்ற கேள்வி எழுகிறது.
Click the link above to read the full article on the original website.


