ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்ட மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்காக இருப்பதால் தனக்கான வழியைத் தேடிப் புறப்பட்டு திமுகவில் கலந்துவிட்டார்.
மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் சீட் உறுதி என்று உத்தரவாதம் அளித்துத்தான் அவரை திமுகவுக்கு அழைத்து வந்தாராம் அமைச்சர் சேகர் பாபு. இந்த நிலையில், ஏற்கெனவே ஆலங்குளத்தில் வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியனுக்கு இந்த முறை அந்தத் தொகுதிக்குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசிவைத்திருப்பதாக வந்து விழும் செய்திகள், அம்பாசமுத் திரத்தில் மூன்று முறை தோற்றும் அந்தத் தொகுதிக்காக இன்னமும் காத்திருக்கும் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வகையறாக்களை கொஞ்சம் திகைக்க வைத்திருக்கிறது.
Click the link above to read the full article on the original website.


