தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார். மேலும், மாநில நிர்வாகிகளுடனும் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போதுவரை மதுரை, சிவங்கை, செங்கல்பட்டு வடக்கு, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரையை நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து, 24-ம் தேதி முதல் பெரம்பூரில் இருந்து மீண்டும் யாத்திரையை தொடங்க இருக்கிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார்.
Click the link above to read the full article on the original website.


