On the occasion of Diwali, 800,000 people traveled from Chennai: Crowds surged in government buses and trains.

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதையொட்டி கிளாம்பாக்கத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க அறிவுறுத்தினார். பயணிகளிடமும் பேருந்து இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. அரசு பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் புகாரளிப்பதற்கும் 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிககட்டண வசூல் புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தெற்கு ரயில்வே சார்பில் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Ponneri | Life sentence for the younger brother who killed his elder brother

“Now the competition is only between Udhayanidhi and Vijay!” – Nanjil Sampath predicts the future course of politics.