English
ஓசூர்: காஷ்மீரில் மழை வெள்ளத்தால் ஜிப்சோபிலா மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் இம்மலருக்கு சந்தையில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஓசூர் பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மலர் சாகுபடியில் திறந்த வெளிகளில் சாமந்தி, செண்டுமல்லி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட மலர்களையும், பசுமைக் குடில்களில் புளூ, பச்சை, மஞ்சள், வெள்ளை டைசி மலர்கள், ஜிப்சோபிலா உள்ளிட்ட அலங்கார மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடையாகும் அலங்கார மலர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள், கோயில் திருவிழாக்களுக்கும், விஐபிகளை வரவேற்க பொக்கே தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்காகவும் டெல்லி,
மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. இதில், உலகில் சிறந்த திருமண மலர்களில் ஒன்றாக கருதப்படும் ஜிப்சோபிலா மலர்கள் காஷ்மீரில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
Tamil
பெருநகர சந்தைகளில் ஓசூர் ஜிப்சோபிலா மலருக்கு வரவேற்பு!
ஓசூர்: காஷ்மீரில் மழை வெள்ளத்தால் ஜிப்சோபிலா மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் இம்மலருக்கு சந்தையில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஓசூர் பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மலர் சாகுபடியில் திறந்த வெளிகளில் சாமந்தி, செண்டுமல்லி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட மலர்களையும், பசுமைக் குடில்களில் புளூ, பச்சை, மஞ்சள், வெள்ளை டைசி மலர்கள், ஜிப்சோபிலா உள்ளிட்ட அலங்கார மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு அறுவடையாகும் அலங்கார மலர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள், கோயில் திருவிழாக்களுக்கும், விஐபிகளை வரவேற்க பொக்கே தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்காகவும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. இதில், உலகில் சிறந்த திருமண மலர்களில் ஒன்றாக கருதப்படும் ஜிப்சோபிலா மலர்கள் காஷ்மீரில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.