“Long live Pakistan”… The chant that echoed in Srinagar Maidan in 1983 – Poova Thalaya | Chapter 1

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் எப்போதும் கிரிக்கெட் விளையாட்டுக்கு பலத்த வரவேற்பு இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு மக்களின் உணர்வுகளுடன் இரண்டற கலந்தது கிரிக்கெட். அதனால்தான் இரு நாட்டு ரசிகர்களுக்கும் தங்கள் அணி வென்றால் அது கொண்டாட்டம். பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான், பின்னாளில் அந்த நாட்டின் பிரதமர் ஆனார். இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் பிரவேசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இப்படி கிரிக்கெட்டுக்கு எப்போதும் இந்தியா, பாகிஸ்தானில் அதீத, அமோக, அட்டகாச ஆதரவு இருப்பதுண்டு.

சமயங்களில் கிரிக்கெட் களத்தில் சில முழக்கங்களை ரசிகர்கள் முன்வைப்பதும் உண்டு. உலக அளவில் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டுகளில் ஒன்று என்பதால் கூட இந்த வகை முன்னெடுப்புகள் இருக்கலாம். 2023 உலகக் கோப்பை தொடரில் அகமதாபாத் நகரில் ‘இந்தியா – பாகிஸ்தான்’ இடையிலான லீக் ஆட்டத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என பார்வையாளர்கள், பாகிஸ்தான் வீரர்களை நோக்கி முழக்கமிட்டதாக தகவல் உண்டு. அது போலவே ஐபிஎல் 2018-ம் ஆண்டு சீசனில் ‘காவிரி நீர்’ விவகாரத்தில் முன்னாள் சிஎஸ்கே வீரர் டூப்ளஸி, மீது காலணி வீசிய சம்பவங்களும் நடந்தது உண்டு.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bomb threat to Palanisami and Seeman’s houses in Chennai

Bail granted to the late rowdy Nagendran’s son Aswathaman until October 28.