தஞ்சாவூர் / திருச்சி/ புதுக்கோட்டை: தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பத்தை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கேட்டது.
இதையடுத்து, ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு 3 குழுக்களை அமைத்தது. இக்குழுவைச் சேர்ந்த பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
Click the link above to read the full article on the original website.


