English
கோவை: தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை என நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டு விடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை. தமிழகத்தில் விளைவித்த நெல்லை விடுத்து ஆந்திரா,
குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏன் அரிசி, வெல்லம் வாங்குகின்றனர். ஒரு நாள் பட்டினி கிடந்து இறந்தால் தான் அனைத்தும் தெரியும்.
Tamil
நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுவதே தமிழக அரசின் சாதனை: சீமான் கண்டனம்
கோவை: தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை என நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டு விடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை. தமிழகத்தில் விளைவித்த நெல்லை விடுத்து ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏன் அரிசி, வெல்லம் வாங்குகின்றனர். ஒரு நாள் பட்டினி கிடந்து இறந்தால் தான் அனைத்தும் தெரியும்.
Click the link above to read the full article on the original website.