மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரிதாப நிலை மற்றும் சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே, சந்தேஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரையும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
Click the link above to read the full article on the original website.


