புதுடெல்லி: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிதாக சேர்ந்துள்ள இளம் பணியாளர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை வழி நடத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.
ரோஜ்கர் மேலா எனும் வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், 51,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டின் தீபாவளி, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது. இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும்.
Click the link above to read the full article on the original website.


