புதுடெல்லி: விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமைய உள்ள கூகுள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் ரூ.87,520 கோடி மதிப்பீட்டில் விசாகப்பட்டினத்தில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாரதத்தில் ஏஐ சக்தி என்ற பெயரில் புதுடெல்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நரலோகேஷ், கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Click the link above to read the full article on the original website.


