தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்மை போட்டி திமுக – அதிமுக கூட்டணி இடையில்தான் என்பதே கள எதார்த்தம். இதில் திமுக கூட்டணி முழு வலிமையோடு நிற்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கூட்டணியை அமைக்க அதிமுக அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா கட்சிகள் மட்டுமே இருந்தாலும், அன்புமணி பாமக, தேமுதிக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இணைவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.
Click the link above to read the full article on the original website.

