தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியது, தி.மு.க-வினரை அதிர வைத்தது.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலின், கட்சி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ஜோசப் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் போட்டியிட வேண்டும் எனத் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், சென்னை அறிவாலயத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படவுள்ளது. கட்சியின் பொதுக்குழு மற்றும் உயர்நிலை செயல்திட்டக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, இந்தத் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று சொல்கிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.