சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எங்கும் ஊழல் – எதிலும் ஊழல். திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலி பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தமிழக காவல்துறை டிஜிபிக்கு அறிக்கை அளித்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரியுள்ளது. தமிழக காவல்துறை யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Click the link above to read the full article on the original website.


