உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அண்மைக்காலமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது பேசுபொருளானது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பல்வேறு குழுக்களை சேர்ந்த 14,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பை தெரியப்படுத்தும் நோக்கில், அதிகாலையில் இரண்டு குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பியுள்ளது அமேசான் நிறுவனம். முதலில் வந்த குறுஞ்செய்தியில், ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்னால் தங்கள் இ-மெயிலை பார்க்கவும் என்றும், அடுத்த சில நிமிடங்களில் வந்த மற்றொரு குறுஞ்செய்தியில், அப்படி இ-மெயில் வராதவர்களுக்கு ஒரு உதவி தொலைபேசி எண்ணும் அனுப்பப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


