புதுச்சேரி: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித் துறையை கண்டித்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவை அடுத்த வீராம்பட்டினத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு 7 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


