கட்சி தொடங்கியதும் அடுத்த முதல்வர் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாமல் திமுகவை வீழ்த்திவிடலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முற்போக்கு புத்தகக் காட்சி, ‘இருவண்ண கொடிக்கு வயது 75’ இரண்டு நாள் கருத்தரங்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். திமுகவின் 75 ஆண்டு கால வரலாறு குறித்த 1,120 பக்கங்களுடன் கூடிய ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.
Click the link above to read the full article on the original website.


