திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் தங்க கவசங்களில் இருந்து சுமார் நான்கரை கிலோ தங்கம் திருடுபோன வழக்கில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். பிறகு இரண்டாவது குற்றவாளியாக தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு கைதானார்.
இருவரையும் இந்த வார தொடக்கத்தில் சிஐடி போலீஸார் ஒன்றாக விசாரித்தனர். பிறகு ஆதாரங்களை திரட்டுவதற்காக சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


