சென்னை: ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைதாகி சிகிச்சையில் இருந்த ரவுடி நாகேந்திரன் இன்னும் இறக்கவில்லை. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான வழக்கறிஞர் ஆனந்தன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த பிரபல ரவுடியான நாகேந்திரன் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரது மகன்கள் உட்பட மொத்தம் 27 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


