Rowdy Nagendran is still alive; the police helped him escape by performing plastic surgery: says Bahujan Samaj Party leader Anandan.

சென்னை: ‘ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைதாகி சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அவருக்கு பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்து போலீ​ஸார் தப்​பிக்க வைத்​து​விட்​டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ரான வழக்​கறிஞர் ஆனந்​தன் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் தெரிவித்​துள்​ளார்.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை​யில் சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டின் அருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். ஏற்​கெனவே பல்​வேறு வழக்​கு​களில் கைதாகி சிறை​யில் இருந்த பிரபல ரவுடி​யான நாகேந்​திரன் இந்த கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவரது மகன்​கள் உட்பட மொத்​தம் 27 பேர் இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Private buses will not operate to Kerala: Tamil Nadu Private Bus Owners Association announces

On the occasion of his 59th birthday, a meat feast for 3,000 people at Seeman’s house: political party leaders extend their wishes