பாட்னா: நிதிஷ் குமாரை பாஜக கடத்திச் சென்றுவிட்டது என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவரை பிஹாரின் முதல்வராக்க மாட்டார்கள் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
சஹர்சா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே பிஹார் முதல்வரை முடிவு செய்வார்கள் என்று அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள். அந்தக் கூட்டணி இப்போது நிதிஷ் குமாரின் கட்டுப்பாட்டில் இல்லை. நிதிஷ்குமார் பிஹாருக்கு வெளியில் இருந்து செயல்படும் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவால் கடத்தப்பட்டுள்ளார். வரவிருக்கும் இந்தத் தேர்தலில் வெளியாட்களுக்கு வாக்களிக்காமல், ஒரு பிஹாரிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
Click the link above to read the full article on the original website.


