Culture 1 min readAugust 8, 2026

Praise for TVK projects by C.V. Shanmugam

Praise for TVK projects by C.V. Shanmugam

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Former Minister C.V. Shanmugam said that the budget has been prepared in line with Tamil Nadu’s current financial situation.

In this regard, he told reporters at the Secretariat on Friday:

Unlike in the past, it has been announced that the schemes introduced by previous rulers will not be stopped, and the ongoing schemes will continue to be implemented. No scheme has been abandoned. This is something worthy of appreciation. Likewise, he said that the budget has been presented in accordance with Tamil Nadu’s current financial situation.

It is noteworthy that former AIADMK ministers S.P. Velumani and C.V. Shanmugam met and spoke in person with ministers N. Anand and K.A. Sengottaiyan at the Secretariat on Thursday.

Tanglish

Tamizhagaththin tharppothaiya nithi soozhalukku earp nithinilai arikkai thayaarikkappattullathu en munnal amaichchaa் si.vi.sanmugam theriviththaaாr.

ithuthodaa்பaaga thalaimai seyagaththil seythiyaalarkalidam vellikkizhamai avaa் kooriyathavathu:

kadantha kaalangalaiப் poonru  munnaiya aatchiyaalarkal konduvantha thittangalai niruththaamal,  nadamuraiyil ulla thittangal thodaa்ந்து nadaiperum en arivikkappattullathu. entha thittaththaiyum kaividavillai. ithu paarattukkuriya onraagum. athaipool, tamizhagaththin tharppothaiya nithi soozhalukku earp nithinilai arikkai thaakkal seyyappattullathu endraaாr.

Athிமுக munnாள் amaichchargal S.P.Velumani, C.V.Shanmugam ஆகியோர் amaichchargal N.Anand, K.A.Sengottaiyan ஆகியோரை thalaimaiச் seyagaththil viyazhakizhamai neril sandhiththu pesiyathu குறிப்பிடத்தக்கது.

Tamil

தமிழகத்தின் தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த காலங்களைப் போன்று  முந்தைய ஆட்சியாளா்கள் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தாமல்,  நடைமுறையில் உள்ள திட்டங்கள் தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் திட்டத்தையும் கைவிடவில்லை. இது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அதேபோல், தமிழகத்தின் தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.