Politics 1 min readJuly 27, 2026

No agricultural loan waiver scheme: Minister informs Parliament

No agricultural loan waiver scheme: Minister informs Parliament

English

Union Minister of State for Finance Pankaj Chaudhary said in Parliament that the central government has no scheme to waive the loans of small and marginal farmers.

In his written reply to various questions related to the finance department, he further said: The Reserve Bank of India has proposed a pilot project to issue Rs. 10 and Rs. 20 notes printed on polymer. A total of 100 crore such notes are to be printed.

If the pilot project is successful, printing of currency notes on polymer will be expanded. The central government has approved this scheme because polymer will be superior to paper in various ways.

There is no scheme with the Central Government to waive the loans of small and marginal farmers just once. Likewise, there is no loan restructuring scheme either, he said.

Tanglish

Siṟu, kuṟu vivasāyikaḷin kaṭankaḷait taḷḷupaṭi ceyyum tiṭṭam ēthum matthiya arasilam illai eṉṟu nāṭāḷumaṉṟatthil matthiya nititthuṟai iṇaiyamaicchār paṅkaj cௌthari terivitthār.

Nititthuṟai toṭarpāṉa palvēṟu kēḷvikaḷukku eḻutthu mūlam aḷittha pattil avar mēlum kūṟiyiruppatāvatu: parisōtthanai muṟaiyil pālimaril acciṭappaṭṭa Ru.10, Ru.20 nōṭṭukaḷai veḷiyiṭum tiṭṭattai intiya risarv vaṅki muṉvaiththullatu. Mottham 100 kōṭi eṉṟa eṇṇikkaiyil inta nōṭṭukaḷ acciṭappaṭa irukkiṉṟaṉa.

Parisōtthanai muyarci veṟṟi peṟṟāl pālimaril rūpāy nōṭṭukaḷai acciṭuvatu virivākkaappaṭum. Itthiṭṭatthukku matthiya arasu opputal aḷitthullatu. Ēṉeṉil, kākitattai viṭa pālimar palvēṟu vakaiyil mēmpaṭṭatāka irukkum.

SiRu, kuRu vivasaayigaLin kadanai orumurai mattum thaLLupadi seyyum thittam edhum madhya arasidam illai. Adhepol kadanai maRuseeramaikkum thittamum illai endraaR.

Tamil

சிறு, குறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

நிதித்துறை தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: பரிசோதனை முறையில் பாலிமரில் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20 நோட்டுகளை வெளியிடும் திட்டத்தை இந்திய ரிசா்வ் வங்கி முன்வைத்துள்ளது. மொத்தம் 100 கோடி என்ற எண்ணிக்கையில் இந்த நோட்டுகள் அச்சிடப்பட இருக்கின்றன.

பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் பாலிமரில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது விரிவாக்கப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏனெனில், காகிதத்தை விட பாலிமா் பல்வேறு வகையில் மேம்பட்டதாக இருக்கும்.

சிறு, குறு விவசாயிகளின் கடனை ஒருமுறை மட்டும் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அதேபோல கடனை மறுசீரமைக்கும் திட்டமும் இல்லை என்றாா்.