Politics 1 min readAugust 6, 2026

Higher fares on special trains with reservation facilities: Railway Minister

Higher fares on special trains with reservation facilities: Railway Minister

English

Railway Minister Ashwini Vaishnaw has said that the fares of special trains with reservation facilities are higher than the fares on ordinary trains.

In response to a question raised in the Lok Sabha by Congress MP Sanjana Jadhav regarding the methods by which fares are determined on trains, Ashwini Vaishnaw submitted his written reply on Wednesday. It stated:

The fare collected on ordinary trains with unreserved second-class coaches is also charged on special trains with unreserved second-class coaches. At the same time, special trains with reservation facilities charge more than the fare collected on ordinary trains.

As a concession for train passengers, Ashwini Vaishnaw has said that the Central Government has provided subsidies of Rs. 60,239 crore for passenger tickets in 2024-25.

Tanglish

Munpathivu vasathi konda sirappu rayilgal kattanam, saatharana rayilgalil ulla kattanathai vida adhigam endru rayilvey amaichar Aswini Vaishnav theriviththullaar.

Rayilgalil kattanam niirnayikkappadum muraigal kurithu makkalavaiyil Kாங்கிரஸ் M.P. Sanjana Jadhav ezhuppiya kelvikku, Aswini Vaishnav ezhuthup poorvamaaga thanadhu pathilai puthan்கிழமை thaakkal seithullaar. Adhil therivikkappattiruppadhu:

Saatharana munpathivillatha 2-m vaguppu pettiகள் konda rayilgalil perappadum kattanamdhaan, munpathivillatha 2-m vaguppu pettiகள் konda sirappu rayilgalilum vasoolikkappadugiradhu. Adhe neraththil munpathivu vasathi konda sirappu rayilgalil, saatharana rayilgalil vasoolikkappadum kattanathai vida adhigam perappadugiradhu.

Rayil payanigalukku salugaiyaaga, 2024-25aam aandil payanigal ticketugalukkaaga ரூ.60,239 kodi madhya arasu maaniyangal vazhangiyulladhu ena Ashwini Vaishnaw theriviththullaar.

Tamil

முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் கட்டணம், சாதாரண ரயில்களில் உள்ள கட்டணத்தை விட அதிகம் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

ரயில்களில் கட்டணம் நிா்ணயிக்கப்படும் முறைகள் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சஞ்சனா ஜாதவ் எழுப்பிய கேள்விக்கு, அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூா்வமாக தனது பதிலை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சாதாரண முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் பெறப்படும் கட்டணம்தான், முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களிலும் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகம் பெறப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு சலுகையாக, 2024-25ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்காக ரூ.60,239 கோடி மத்திய அரசு மானியங்கள் வழங்கியுள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.


மூலதளம்: இந்தியா
Click the link above to read the full article on the original website.