Culture 1 min readAugust 5, 2026

High Court orders bail for two more in the horse race case

High Court orders bail for two more in the horse race case

English

Chennai: While bail had already been granted to 11 people arrested in the horse-trading case, the Chennai High Court has ordered bail for two more people.

Triplicane police have arrested 14 people for allegedly engaging in horse-trading with TVK MLA Ilayaraja of the Uthangarai constituency.

In this case, in which former DMK minister Senthil Balaji and his brother Ashok Kumar have obtained anticipatory bail, 11 people have so far been granted bail.

With the Chennai High Court having barred the Triplicane police station from investigating the case, Karunanidhi and Saravanan, who were arrested in the case, had filed petitions in the Chennai High Court seeking bail.

Both petitions came up for hearing today before Judge G.K. Ilanthiraiyan. Accepting their request, the judge ordered bail for both of them.

Tanglish

Chennai: kuthirai pera vazhakkil kaithana 11 perukku jaamin vazhangappattirundha nilaiyil, melum iranduperukku jaamin vazhangi Chennai Uyar Neethimandram uththaravittulladhu.

Ooththangarai thoguthi Thaveka M.L.A. Ilaiyarajavidam kuthirai peram nadaththiyadhaaga Thiruvallikkeni policeaar, 14 perai kaidhu seidhullanar.

DMK munnal amaichar Senthil Balaji maattrum avarudaiya sagodharar Ashok Kumar aagiyor munjaamin petrulla indha vazhakkil, idhuvarai 11 per jaamin petrullanar.

Thiruvallikkeni kaaval nilaiya visaaranaikku Chennai Uyar Neethimandram thadai vidhiththulla nilaiyil, vazhakkil kaidhu seiyappatta Karunanidhi matrum Saravanan aagiyor jaamin kori Chennai Uyar Neethimandratthil manuth thakkaal seidhirundhanar.

Iruvaradhu manukkalum indru needhibathi J.K.Ilanthiraiyan munbu visaranaiyku vandhadhu. Appodhu avargaladhu korikkaiyai yetra needhibathi, iruvarukkum jaamin vazhangi uththaravittaar.

Tamil

சென்னை: குதிரை பேர வழக்கில் கைதான 11 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீஸார், 14 பேரை கைது செய்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுள்ள இந்த வழக்கில், இதுவரை 11 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர்.

திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இருவரது மனுக்களும் இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.