Politics 1 min readJuly 27, 2026

Boy’s death: Allegation against government hospital

Boy’s death: Allegation against government hospital

English

Relatives have alleged that a 17-year-old boy died because proper treatment was not provided at the Kalaignar Centenary Super Specialty Hospital in Guindy.

Ayyanarappan, a resident of Velachery in Chennai, works in electrical services. On the 16th, while Ayyanarappan was traveling on a two-wheeler with his 17-year-old son Darshan, they were hit by a city electric bus near the Kathipara flyover in Guindy and were involved in an accident.

People nearby rescued them and sent them to the Guindy Super Specialty Hospital. After treatment, Ayyanarappan recovered, and last Friday Darshan underwent bone reconstruction surgery.

After that, his condition worsened and Darshan died. Doctors said the cause was a severe lung infection. However, his parents and relatives refused to accept this and accused the hospital’s negligence of causing his death. They also released a video recording in this regard.

Meanwhile, the hospital administration, in its explanation on the matter, said that the boy did not die because of the surgery, and that his extremely poor health condition was the reason for his death.

Tanglish

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினா்கள் குற்றச்சாட்டியுள்ளாா்.

சென்னை, வேளச்சேரியைச் சோ்ந்த அய்யனாரப்பன் என்பவா் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி அய்யனாரப்பன் தன்னுடைய 17 வயது மகன் தா்ஷன் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாநகர மின்சார பேருந்து மோதி விபத்தில் சிக்கினாா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சைக்குப் பிறகு அய்யனாரப்பன் குணமடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தா்ஷனுக்கு எலும்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

adhan pinnaar udal nilai mosamadaindhu dhaarshan uyirizhandhaar. avarukku theevira nuraiyeeral thotru yerpatthathe adharku kaaranam en maruthuvargal theriviththullanar. aanaal, adhai yerka marutha petrorum, uravinargalum maruthuvamanaiyin alatchiyame uyirizhappukku kaaranam en kutramsaattinaar. idhuthodarbaga avargal vidiyo padhivum veliyittanar.

idhanidaye, idhukurithu vilakkamaliththulla maruthuvamanai nirvaagam, aruvai sigichchaiyaal andha siruvan uyirizhakkavillai endrum, avarudaiya udal nilai miga mosamaaga irundhathe irappukku kaaranam endrum theriviththulladhu.

Tamil

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினா்கள் குற்றச்சாட்டியுள்ளாா்.

சென்னை, வேளச்சேரியைச் சோ்ந்த அய்யனாரப்பன் என்பவா் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி அய்யனாரப்பன் தன்னுடைய 17 வயது மகன் தா்ஷன் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாநகர மின்சார பேருந்து மோதி விபத்தில் சிக்கினாா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சைக்குப் பிறகு அய்யனாரப்பன் குணமடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தா்ஷனுக்கு எலும்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னா் உடல் நிலை மோசமடைந்து தா்ஷன் உயிரிழந்தாா். அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டதே அதற்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், அதை ஏற்க மறுத்த பெற்றோரும், உறவினா்களும் மருத்துவமனையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினா். இதுதொடா்பாக அவா்கள் விடியோ பதிவும் வெளியிட்டனா்.

இதனிடையே, இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிா்வாகம், அறுவை சிகிச்சையால் அந்த சிறுவன் உயிரிழக்கவில்லை என்றும், அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்ததே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.