பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று கூறியதாவது: பிஹாரில் எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்குள் மோதல்களும் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. இதனால் அந்தக் கூட்டணி உடைந்துவிடும். தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுயநலம் இருக்கக் கூடாது. அரசியல் புரிதல் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


