LPG: `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்’ – சிலிண்டர் தட்டுப்பாடா? – மத்திய அரசின் திட்டம் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பரவியது. அதனால், உலக நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற எண்ணெய், எரிபொருள் விற்பனை சிக்கலை சந்தித்தது. அதன் காரணமாக இந்தியா முழுவதும், இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 1955-ம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்பது பொதுமக்களுக்கு அவசியமானதாகக் கருதப்படும் குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த இயற்றப்பட்ட ஒரு மையச் சட்டமாகும். இது நியாயமான விலையில் சமமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளையில், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கவும் வழிவகுக்கும்.

பிரதமர் மோடி

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் நிலையான கிடைப்பை உறுதி செய்யவும், செயற்கையான பற்றாக்குறையைத் தடுக்கவும், இந்தப் பொருட்கள் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் விலைகளை ஒழுங்குபடுத்தவும் இந்த சட்டம் செயல்படுத்தப்படும். இந்த அத்தியாவசியப் பொருள் என்ற வரையறைக்குள் சட்டத்தின்  அட்டவணையில்  குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் குறிக்கிறது.

மேலும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு அட்டவணையில் இருந்து பொருட்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம். மேலும், எந்தவொரு நபரோ அல்லது வர்த்தகரோ ஒரு பொருளின் இருப்பை வைத்திருக்கக்கூடிய அளவை அரசே நிர்ணயிக்க முடியும்.

இந்தச் சட்டம், குறிப்பாக உணவு தானியங்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களுக்கு விலைகளை நிர்ணயம் செய்ய அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில்தான் எல்.பி.ஜி எரிவாயுவுக்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

டேங்கர் லாரி

எனவே, அரசின் இந்த உத்தரவை மீறினால் பிரிவு 3 இன் கீழ் உத்தரவுகளை மீறினால் மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், பதட்டத்தை மீறினால், பொருட்களையும், அவற்றின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுபவற்றை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.

உக்ரைன் போருக்குப் பிந்தைய காலத்தில் எண்ணெய் துறையில் அரசாங்கம் ESMA விதிகளைப் பயன்படுத்தியது, அதிக லாபம் காரணமாக லாபகரமானதாக மாறிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Debt waiver… it tastes bitter to farmers, but sweet to corporations!

<div>திமுக கூட்டணி: `அரசியல்ல சங்கடங்கள் சாதாரணம்’ பாஸ்! – வடிவேலு முதல் கமல், ஓ.பி.எஸ் வரை!</div>