கரூர்: கருர் வேலுச்சாமிபுரத்தில் இன்று காலை இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் 3டி ஸ்கேனர் உதவியுடன் காலை 7 மணி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு நடைபெறும் இடம் இடம் கரூர் ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் மக்கள் போலீஸாருடனும், சிபிஐ அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Click the link above to read the full article on the original website.


