மதுரை: போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த ஷர்மிளா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ”போக்சோ வழக்குகளில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பிடுகையில் என்ஏஎல்எஸ்ஏ (தேசிய சட்ட உதவிகள் ஆணையம்) இழப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை விட குறைவாக உள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வதிலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
Click the link above to read the full article on the original website.


