“Dear women rights fund beneficiaries…” – Minister Geethajeevan in a postal campaign

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை’ தங்கள் ஆட்சியின் உன்னத திட்டங்களின் ஒன்றாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறது திமுக. சொன்னபடி, அனைத்து மகளிருக்கும் இந்தத் திட்டத்தின் பலனைத் தரவில்லை என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை வசைபாடினாலும், “தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்” எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறது திமுக.

இந்த நிலையில், அரசு அண்மையில் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் ஏராளமான பெண்கள், ‘மகளிர் உரிமைத் தொகை’ கேட்டு மனு கொடுத்துவிட்டு தகவலுக்காகக் காத்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இம்முறை, மனு கொடுத்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் என்றொரு பிரச்சாரமும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ-வான அமைச்சர் பி.கீதாஜீவன் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தபால் மூலம் தனது தொகுதிமக்களுக்கு நினைவூட்டி முன்கூட்டியே வாக்குச் சேகரிக்கத் தொடங்கிவிட்டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Two terrorists planning to carry out an attack in Delhi have been arrested.

Is EPS criticizing Stalin’s former loyalist for Kolathur?