விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம், அப்பண்ணபாளையம் வர்ஷிணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய சர்மா. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இவர்களுடன் சுப்பிரமணிய சர்மாவின் தாயார் கனக மகாலட்சுமி (66) வசித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சமையல் அறையில் மின் கசிவு ஏற்பட்டதில் தீயில் மாமியார் கனக மகாலட்சுமி சிக்கிக் கொண்டதாக லலிதா அலறினார். தகவல் அறிந்து பொதுமக்கள் தீயை அணைத்து கனக மகாலட்சுமியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாரிடம் லலிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
Click the link above to read the full article on the original website.


