பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பிஹாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகாகட்பந்தனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள அனைத்தையும் செய்வேன். தற்போது ஆட்சியில் உள்ள 20 ஆண்டு கால அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து முடிவுக்குக் கொண்டு வருவோம்.
Click the link above to read the full article on the original website.


