சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு (எஸ்ஐஆர்) திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, திராவிடர் கழகம் உட்பட 49 கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஸ்டாலின் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
Click the link above to read the full article on the original website.


