தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாததால் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சுதா மோகன்லால் என்பவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். இவர், ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனக்கு சொந்தமான 8 சொத்துகளுக்கு கடந்த 2022-23-ம் ஆண்டு சொத்துவரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், சொத்துவரியை செலுத்தவில்லை.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


