Heir leaders competing fiercely for the election in Nellai!

சபாநாயகர் மு.அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் ஆ.பிரபாகரன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும் பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான மு.அப்துல்வகாபின் மகன் முசாம்பில் என நெல்லை திமுக-வில் வாரிசுத் தலைவர்கள் வரிசை கட்டும் நிலையில், பாஜக தலைவரும், எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியும் இப்போது இந்தப் பட்டியலுக்குள் வந்திருக்கிறார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த அலெக்ஸ் அப்பாவு, அண்மையில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது ராதாபுரம் தொகுதிக்காக மகனைத் தயார்படுத்தும் அப்பாவு, உட்கட்சி எதிரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் அலெக்ஸை இறக்கிவிட்டு ஆழம் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவருக்கு முன்னதாகவே தனது மகன் பிரபாகரனை கட்சியினருக்கு பரிச்சயமாக்கிவிட்டார் ஆவுடையப்பன்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

It was always like that back then..! – Remembering Kambam Selvendran

Following former Election Commissioner Seshan, a separate section for women wearing burqas at the polling station.