It was always like that back then..! – Remembering Kambam Selvendran

“மரணத்துக்கு உடலைக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. ஆனால், மனிதனைப் பற்றிய நினைவுகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் அந்த மரணத்துக்கு இல்லை. அதனால் தான் கலைஞரின் நினைவுகள் இன்றும் நம்மோடு இருக்கின்றன” என்று அழகாகப் பேச ஆரம்பிக்கிறார் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன். அவரிடம் அந்தக் காலத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் நடைமுறைகள் எப்படி இருக்கும் என்று கேட்டு பேச்சுக் கொடுத்தோம். “அதை எல்லாம் இனிமேல் எதிர்பார்க்க முடியுமா தம்பி…?” என்றபடி டைம் மெஷினைத் தட்டிவிட்டார் செல்வேந்திரன்.

“1965-ல் நான் பள்ளியில் படித்த காலத்திலேயே கலைஞரை ஹீரோவாகப் பார்த்தவன். 1971-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது நேரடி அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். அப்போதெல்லாம் தேர்தல் வரைதான் கட்சிகளுக்குள் ஒருவருக்கு ஒருவர் போட்டி மனநிலை இருக்கும். அதன் பிறகு அனைத்தையும் மறந்து ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவோம். பிரச்சாரத்துக்குச் செல்லும் ஊர்களில் தங்கும் விடுதி வசதி எல்லாம் அப்போது குறைவு. பெரும்பாலும் கட்சிக்காரர்களின் வீடுகளில் தான் தங்கவேண்டும். பல நேரங்களில் அதுகூட கிடைக்காமல் வீட்டுத் திண்ணைகளில் தூங்கி எழுந்த அனுபவமும் நிறையவே இருக்கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

A prestigious Diwali gift | Insider spy

Heir leaders competing fiercely for the election in Nellai!