திருவள்ளூர்: திருவள்ளூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி விவேகானந்த சுக்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


