திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 4,500 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர பகுதிகள், பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


