விசாகப்பட்டினம்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து பேருந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்னூல் அருகே பேருந்து தீப்பற்றி 20 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து அனைவரையும் உலுக்கியது. இதை தொடர்ந்து தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் தாண்டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜெயபுரா எனும் ஊருக்கு ஒடிசா மாநில அரசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திரா -ஒடிசா எல்லையில், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், ரொட்டவலசா எனும் இடத்தில் நேற்று காலை 7.45 மணியளவில், திடீரென அந்த பேருந்திலிருந்து புகையும், நெருப்பும் கிளம்பியது.
Click the link above to read the full article on the original website.


