English
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதி நேரடி சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
Tamil
தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதி நேரடி சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
Click the link above to read the full article on the original website.