மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மயிலாடுதுறையில் வன்னியர் சங்கநகர செயலாளராக இருந்தவர் கொத்தத் தெருவை சேர்ந்த கண்ணன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கடந்த 2021 நவம்பர் மாதம் ஓர் உணவகத்தில் சாப்பிடும்போது மோதல் ஏற்பட்டதில், கலைஞர் குடியிருப்பை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவரை கண்ணன் தாக்கியுள்ளார். கதிரவன் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்து,கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.


