புதுடெல்லி: மேற்கு வங்கத்தில், மருத்துவக் கல்லுாரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்கு வங்கம், பச்சிம் வர்தமான் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இவர், தன் ஆண் நண்பருடன் உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் , அந்த மாணவியின், 'மொபைல் போனை' பறித்ததுடன், மருத்துவக் கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர்.
Click the link above to read the full article on the original website.


