New dam in Mullai Periyar: ICMU demands to establish state rights

சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணையின் வலுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையில் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை போதுமான வலுவுடனும், உறுதியோடும் இருப்பதும், நில நடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Minister Ragupathi says EPS is dreaming of forming an alliance based on the Karur incident.

Increased water inflow due to rain: release of surplus water from Poondi and Puzhal reservoirs.