அரியலூர்: “தலைமறைவாக இருந்த தவெகவினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இப்போது வெளியே வருவது மட்டுமல்ல, நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். முதலில் சிரிப்பது முக்கியமல்ல, இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள, பெரியார் உலகத்திற்கு நிதி பங்களிப்பு தரும் நிகழ்ச்சி அரியலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, திக நிர்வாகிகள் மற்றும் குடும்பங்களிடமிருந்து பெரியார் உலக கட்டமைப்புக்கான நிதிப்பகிர்வாக முதற்கட்ட தொகையாக ரூ.10-லட்சம் பெற்றுக் கொண்டார்.
Click the link above to read the full article on the original website.

